வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!!

797

Body

யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு 3ம் வருட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த யாசோதரன் (24) என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், யாழ். நாச்சிமார் கோவிலடியில் வாடகை அறையில் தங்கி இருந்து பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்தவர் எனவும் இன்று காலை அவரது அறைக்கு வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.