வவுனியா நெளுக்குளம் பொலிசாரினால் மக்கள் நலன் கருதி விசேட பூசை வழிபாடு!!

1479

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிசாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.

இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.