10 வருடங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவன் செய்த கொடூர செயல்!!

433

தெலுங்கானாவில்..

சந்தேகத்தின் பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய் (41). ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பலதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். புஷ்பலதா பியூட்டிஷியன் படித்து வந்தார்.

மனைவி புஷ்பலதாவின் நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவருக்கும் புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், விஜய்யின் சகோதரி சமீபத்தில் NNURM காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினார்.

நேற்று மாலை வீட்டை சுத்தம் செய்ய மனைவி புஷ்பலதாவை அழைத்துச் சென்றார் விஜய். விஜய் படுக்கையறையில் கழுத்தை அறுத்து புஷ்பலதாவை கொன்றார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்துல்லாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட புஷ்பலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் புஷ்பலதாவை கொலை செய்ய அவரது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது தெரியவந்தது. கொலை நடந்த முந்தைய நாள் விஜய் கத்தியை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் விஜய்யை கைது செய்தனர்.

அப்துல்லாபூர்மேடு போலீசார் கூறுகையில், விஜய் தனது மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகம் கொண்டதால் இந்த கொலையை செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே சந்தேகத்தின் காரணமாக பிரச்னை இருந்து வந்தது.

இதுகுறித்து புஷ்பலதாவும் புகார் அளித்துள்ளார்,” என்றனர். கடந்த 2014ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.