இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் : மருத்துவர் கூறும் எச்சரிக்கை!!

709

உணவு..

காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும் இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது உண்டு. அந்தவகையில் இரவு உணவை தவிர்ப்பது என்பது அனைவருக்கும் இப்பொழுது வழக்கமாகியுள்ளது. இரவு உணவை தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி மருத்துவர் ஷைனி சுரேந்திரன் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது குறித்து விரிவாக காணலாம்

இரவு உணவை தவிர்த்து வேலையில் செய்து கொண்டிருக்கும்போது சோர்வாக உணர்ந்தால் அதன் பின் தேவையற்றை உணவுகளை உன்ன நேரிடும். இரவு உணவை தவிர்ப்பதால் தூக்கமின்மை ஏற்பட்டு மறுநாள் முழுக்க சோர்வாக இருக்கும்.

மேலும் தலைவலி ஏற்பட்டு, புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது அமிலத்தன்மை(Acidity), இரைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு உணவு சாப்பிட்ட பின் குறைந்தது 2½ மணி நேரம் கழித்து தான் தூங்கவேண்டும். அப்போது தான் உணவு செரிமானமாகி வயிறு நிரம்பிய உணர்வை தராது.

இரவு உணவாக என்ன எடுத்துக்கொள்ளலாம்?
1 கப் சுண்டல்
பழங்கள்
காய்கறிகள் சூப்
அரிசி கஞ்சி
சோள அவல்(Cornflakes)
பால்
உடைத்த கோதுமை உப்மா
உடைத்த கோதுமை கஞ்சி
காய்கறிகள் சாலட்
காய்கறிகள் சான்வெஜ்
புதினா சட்னி
காரம் இல்லாத இறைச்சி
ஓட்ஸ் கஞ்சி