எலி கடித்ததால் பெரும் அவதி : மன உளைச்சலுக்கு ஆளான பெண் எடுத்த விபரீத முடிவு!!

534

தூத்துக்குடியில்..

எலி கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையாமல் அவதிப்பட்டு வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மகள் குருவம்மாள் (வயது 32). அவருக்கு திருமணமாகவில்லை. இவர் கொரோனா பாதிப்பின் போது ஒப்பந்த அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவம்மாளை எலி கடித்துள்ளது.

இதனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சரியாக குணமடையாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டார். இதனால் மன வேதனையடைந்த குருவம்மாள் கடந்த 18ம் தேதி வீட்டில் கத்தியால் கழுத்து மற்றும் கைகளை திடீரென அறுத்து கொண்டார்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குருவம்மாள் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து குருவம்மாளின் தாய் வசந்தி (53) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.