தினமும் அம்மாவை தொல்லை செய்து வந்த தம்பி : ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!!

119

புதுச்சேரியில்..

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பி தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி வில்லயனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72).

இவரது மூத்த மகன் வெங்கடேசன் (54), கூலித்தொழிலாளி. திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கல்யாணசுந்தரம் (35). இன்னும் திருமணமாகாத அவர் தனது தாய் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்தார்.

கூலித்தொழிலாளியான கல்யாணசுந்தரம் மீது காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தாயாரை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் கல்யாணசுந்தரம், ஆதிலட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று காலை ஆதிலட்சுமி இது குறித்து மகன் வெங்கடேசனிடம் , கல்யாணசுந்தரம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

உடனே வெங்கடேசன் வீட்டில் இருந்த கல்யாணசுந்தரத்தை அழைத்து கண்டித்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அருகில் கிடந்த கட்டையால் கல்யாணசுந்தரத்தை தாக்கியதில், திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தம்பி இறந்ததால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நேராக மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று தம்பியை அடித்துக் கொன்றது குறித்து போலீசில் சரணடைந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். இதையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.