கனடா ஆசையால் பெண்ணிடம் ஏமாந்த பலர்!!

639

கனடாவில்..

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 – 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார். இத்தகவலை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த சிலர், பெண்ணின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளது. சந்தேகநபரான பெண் , அவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துவழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குருணாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட பொத்துஹெர, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர்.

கைதான 37 வயதுடைய சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .