அங்குலானயில்..
12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய மற்றுமொரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அங்குலான பொலிஸாரால் நேற்று(26.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.