யாழ்ப்பாணத்தில் திடீரென மாயமான இளைஞன்!!

590

யாழில்..

யாழ். இணுவிலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்தில் இருந்து இளைஞன் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞன் மாயமான தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போன இளைஞனை பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.