டிக் டொக் மோகத்தால் ஏற்பட்ட விபத்து : இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

632

ஹொரணையில்..

மோட்டார் சைக்கிளிலை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துள்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்திச்செல்வதை காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டாள் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.