யாழில் சிறையில் இருந்து வந்தவர் திடீர் உயிரிழப்பு : உறவினர்கள் சந்தேகம்!!

916

யாழில்..

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி, விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் திடீர் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகின்றதுடன், இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.