மேலதிக வகுப்புக்கு செல்ல பணமில்லை : விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

865

தனியார் வகுப்புக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத சோகத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (30.01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி கற்கும் ஆயிஷா பர்வீன் என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி இரத்த அழுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது தாயாரிடம் கணித வகுப்புகளுக்கு பணம் கேட்டுள்ள நிலையில்,அங்கு தனது தந்தை மற்றும் அவரது தாயாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.

அவரை உடனடியாக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.