மன அழுத்ததில் மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்த சோகம்!!

344

காஜியாபாத்தின் ரூர்க்கியை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. இவர் சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது மனைவி தீபக். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வினோத்துக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக தொற்று இருந்தது. இதற்காக வினோத் மருத்துவ சிகிச்சை பெற்று வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், வினோத்துக்கு மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில், வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வினோத், கால்வாயில் விழுந்து இறக்க முயன்றார்.

வினோத்தின் நண்பர் ஒருவர் அவரைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கச் சொன்னார். ஆனால் வினோத் ஒத்துழைக்கவில்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறார்.

தான் தற்கொலை செய்ய போவதாக ஒருமுறை தன் தங்கையிடம் கூறியிருந்தார். இந்நிலையில், வினோத்துக்கு பினு என்ற நண்பர் இருந்துள்ளார், அவரிடம் இருந்து கடந்த வாரம் துப்பாக்கியை வாங்கி காரில் மறைத்து வைத்திருந்தார் வினோத்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மதுபன் பாபுதம் அருகே காரில் தம்பதியர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்கள் வினோத் மற்றும் அவரது மனைவி தீபக் என அடையாளம் கண்டனர்.

தீபக் காருக்கு வெளியேயும், வினோத் காருக்குள்ளும் இறந்து கிடந்தனர். வினோத் கையில் துப்பாக்கி இருந்ததால், வினோத் தனது மனைவி தீபக்கை கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வினோத்திடம் துப்பாக்கியை கொடுத்த பினுவை போலீசார் தேடி வருகின்றனர்.