டென்மார்க் நாட்டில் மொடல் அழகி ஒருவர் மேலாடையின்றி கருப்பு சாயத்தை அடித்து சாலையில் வலம் வந்துள்ளார்.
டென்மார்க் தலைநகர் கோபன்கேகென் நகரின் அருகே உள்ள பிரிடரிஸ்பெர்க் என்ற இடத்தில் அழகி ஒருவர் கருப்பு நிற மேலாடையை அணிந்து சாலையில் நடந்து சென்றுள்ளார்.
ஆனால் இவரை கூர்ந்து உற்று நோக்கியதில் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர் மேலாடை அணியாமல் கருப்பு நிற சாயத்தை தனது உடம்பில் பூசிக் கொண்டுள்ளார்.
இவரை பார்த்த பலர் தங்களது கமராவில் புகைப்படமும், காணொளிகளும் எடுத்தனர். ஆனால் இவரோ யாரையும் கண்டுகொள்ளாமல் பார் ஒன்றில் மது அருந்துவிட்டு சாவகாசமாக சென்றுள்ளார்.
இந்நிலையில் டேனிஷ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதிய தொலைக்காட்சி தொடரை வித்தியாசமாக விளம்பரப்படுத்த மொடல் ஒருவரை டாப்லெஸ் ஆக நிற்கவைத்து உடலில் கருப்பு நிற டீசேட் வடிவில் வர்ணம் செய்து சாலையில் நடக்கும்படி செய்தது தெரியவந்துள்ளது.






