புதிய சாதனை படைத்த இலங்கை அணி வீரர் பதும் நிஷங்க!!

630

இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன், இதற்கு முன் அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவின் (189) சாதனையை பதும் நிஷங்க முறியடித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, 139 பந்துகளை எதிர்கொண்ட இவர், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேவேளை, இன்றைய போட்டியில், இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.