பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணத்தில் திடீர் திருப்பம்!!

323

Actress murder

பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஜியா கானின் அம்மா ரபியா கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர் அந்த மனுவில், மும்பை பொலிஸார் கூறுவதுபோல் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலைதான் செய்யப்பட்டாள்.

எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ஜியா கான் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

25 வயதான நடிகை ஜியா கான் கடந்த ஆண்டு யூன் 3ம் திகதி மும்பையில் உள்ள தனது வீ்ட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் பிரபல திரை நட்சத்திர ஜோடிகளான ஆதித்யா பஞ்சோலி, சாரினா வஹாப் ஆகியோரின் மகனான 22 வயதாகும் நடிகர் சூரஜ் பஞ்சோலி, ஜியா கானுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

மேலும் மரணமடைந்தவற்கு முன்பு ஜியா கான் கடைசியாக சூரஜ்ஜுடன் தான் பேசியுள்ளார் என்றும், அவருடனான உறவு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சூரஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.