போதைப்பொருள் வாங்க பணம்கேட்ட மகனை கொலை செய்த தந்தை : இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

1160

போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை , தந்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் தெரீலங்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கும்புக்கெட்டிய, வெல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் நேற்று (18.02) வழமைப்போல போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் தந்தை , தனது மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.