நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டி பொலிஸாரை அச்சுறுத்திய பெண்கள்!!

998

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் புதையல் தேடுவதற்காக நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு சென்ற மதவாச்சி பொலிஸாரை வீட்டினுள் நுழையவிடாது மூன்று பெண்கள் கைகளை அறுத்து அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியை சேர்ந்த தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உளவு பார்த்த தாய், மகள் மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.