நடுரோட்டில் மனைவியை தீவைத்து எரித்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

463

கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி 19ம் தேதி காலை, ஸ்கூட்டியில் ஆரத்தி தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அவரது கணவர் அவரை வழிமறித்து ஆரத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

ஆரத்தியின் அலறல் சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு வந்து , எரிந்துக் கொண்டிருந்த ஆரத்தியை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு, உடனடியாக சேர்த்தலாவில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் ஆரத்தி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஷியாம்ஜித் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆரத்தியுடன் தீயில் சிக்கிய ஷியாம்ஜித்துக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.