10 ரூபாய் தகராறு… சகோதரன் பேச மறுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

497

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இன்ஜினியரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவரது அண்ணன் விட்டல், மலர்விழியிடம் தனது செலவுக்கு பத்து ரூபாய் தருமாறு கேட்டார். ஆனால் மலர்விழியோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறி பணம் தர மறுத்துவிட்டார். இதனால் அண்ணன், தங்கை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் கோபமடைந்த விட்டல், ‘இனி உன்னிடம் பேசமாட்டேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பத்து ரூபாய்க்கு அண்ணன் பேச மறுத்ததால் மனமுடைந்த மலர்விழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.