தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து : ஒருவர் பலி!!

1198

கந்தளாய் -கிதுலுதுவ பிரதேசத்தில் வானுடன் லொறி மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (22.02.2024) மாலை இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து மேலதிக விசாரணை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் எதிர் திசையாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ள நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.