பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து புதிய உலக சாதனை படைத்த திருகோணமலை மாணவன்!!

1124

திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார். குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் திஇ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தன்வந்த்திற்கு அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.