புது மண தம்பதிகளுக்கு ஏற்பட்ட சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

1179

திருமணமான இரண்டே மாத்தில் இந்தியாவின் காஸியாபாத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த இருவரும், திங்கட்கிழமை (பிப்ரவரி 26) டெல்லியில் உள்ள விலங்கியல் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அபிஷேக், 25, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே, மனைவி அஞ்சலி நண்பர்களின் உதவியுடன் அபிஷேக்கை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அபிஷேக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அபிஷேக்கின் நல்லுடல், தம்பதியின் வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் காதல் கணவன் உயிரிழாந்ததை தாங்க முடியாத அஞ்சலி, யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென்று , ஏழாம் மாடியிலிருந்த தங்கள் வீட்டு மாடத்திலிருந்து கீழே குதித்தார்.

கணவரின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் அஞ்சலி திடீரென்று மாடத்தை நோக்கி ஓடியபோது உறவினர்கள் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

மாடியில் இருந்து விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது