வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு

1054

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின்…

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பேடன் பவல் பிரபுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சாரண மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 10 ஆவது தேசிய ஜம்போறியில் பங்குபற்றிய சாரண மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் குருதி வங்கியில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆணையாளரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிபருமான ம.ச.பத்மநாதன் அவர்களும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் வவுனியா வடக்கு பிரதி கல்விப் பணிப்பாளருமான ம.ஜெயரூபன் அவர்களும், சாரணர் சங்க உபதலைவரும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபருமாகிய தமிழழகன் அவர்களும், உதவி மாவட்ட ஆணையாளர்கள், ஜனாதிபதி சாரணர்கள், திரி சாரணர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் குருதிக் கொடையிலும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.