கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான பின்னணி!!

1675

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்த அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நட்பின் அடிப்படையில் அவருக்கு உதவ தனுஷ்க விக்கிரமசிங்க முன்வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள அவர் முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனுஷ்க விக்கிரமசிங்க தாக்குதலில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.