யாழில் விடுவிக்கப்பட்ட பகுதியில் இன்ப அதிர்ச்சி : சிவனை சுற்றிய வெள்ளை நாகம் : மக்கள் பரவசம்!!

912

யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெள்லை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த 10ம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தன.

இராணௌவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை தெற்கு பகுதியில் இராணுவத்தினரால் சிறு கோயில் போன்ற அமைப்புக்குள் பிள்ளையார் , சிவலிங்க உருவங்களும் இலட்சுமின் உருவப்படமும் வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில் காணி விடுவிப்புக்கு முன்னரான காலப்பகுதியில் குறித்த சிவலிங்க திருவுருவத்தை வெள்ளை நாக பாம்பு சுற்றியிருக்கும் காணொளியானது இராணுவத்தினரால் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அதேசமயம் குறிப்பாக இந் நாக பாம்பானது வெள்ளி , பௌர்ணமி தினங்களில் ஆலய வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தததாக அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் அபூர்வமானதாக கருதப்படும் வெள்ளைநாகம் சிவலிங்க ம்பெருமானை தருசிக்க வருவதாக கூறப்படும் சம்பவம் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.