யாழில் சாதி பாகுபாட்டால் அரங்கேறிய கொலை : இளைஞன் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

198

யாழ்ப்பாணம், பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு காரணம் கடந்த வருடம் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் ஒருவர், இரண்டு வருடங்களின் முன்னர் சாதி மாறி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2022ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் அவர்களின் பிரதேசத்தில் உள்ள கோயில் திருவிழாவின் போது, அந்த இளைஞன் சுவாமி தூக்க முயன்றார்.

அப்போது சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததால் சுவாமி தூக்க முடியாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். கோயிலில் இருந்து வெளியேறிய அந்த இளைஞன், தனது மூத்த சகோதரனிடம் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பவித்திரன், தனது தம்பியை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டு, வட்டுக்கோட்டை, மாவடியில் வைத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை வாளால் வெட்டியுள்ளார்.

அதன்பின்னர், பிரதேசத்தை விட்டு வெளியேறிய அவர், மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று, மாலை 3 மணியளவில் வட்டு தென்மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அவர் வருவதை அறிந்த குழுவினர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.