நண்பருடன் சென்றவர் உயிரிழப்பு : நடந்தது என்ன?

657

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் நண்பருடன் வேட்டைக்கு சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் பலியாகியுள்ளார். இந்நிலையில் அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.