5 வயது இலங்கைச் சிறுவன் புதிய உலக சாதனை!!

394

5 வயது இலங்கை சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுவரேலியா – தலவாக்கலையைச் சேர்ந்த பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.