வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை மதிய உணவு உட்கொண்டனர் – சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர்

877

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை…

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா சிறைச்சாலையில் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் சிறைக்காவலில் உள்ளவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்று வெளிய வந்த பின்னர் அவர்கள் நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படும் போதிலிருந்து தற்போது வரை அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க அவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.