ஒரே கல்லூரியில் 3 மாதங்களில் 25 பேர் தற்கொலை… சிக்கிய கடிதம்… குதித்து உயிர்விட்ட மாணவி!!

1575

ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் காரணமா என்கிற ரீதியிலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவி சாகித்யா, கல்லூரி வளாகத்தில் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவி சாகித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தனது தோழி ஒருவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த கடிதத்தில், “உன்னிடம் சொல்லாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடு. நீ தான் என் உயிர் தோழி. கடந்த 3 மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை.

என் மூளை ஒட்டுமொத்தமாக இறந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் எல்லாம். உன்னுடன் நட்பாக பழகிய யாரும் உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்க மாட்டார்கள் என உருக்கமாக தனது தோழி குறித்து கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி சாகித்யா உட்பட கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்த கல்லூரியில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. போலீசார் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.