கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

983

கனடா ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே ஒருவரே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இவர் நேற்று வியாழக்கிழமை (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. மேலும் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.