கடும் வெப்பம்.. மக்களே அவதானம்.. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

749

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று(15.03.2024)சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும்.

இந்த வெப்பமான காலப்பகுதியில் குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.