2 பிள்ளைகளின் தாய் கொலை : சிக்கிய குற்றவாளி!!

939

சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் 2 பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகநபர் பல்லாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

27 வயதுடைய இளம் தாய் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி ரத்தொலுவ,பகுதி விடுதி அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு விடயத்தையும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.