வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 5 கோடியை இழந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

426

தென்னிலங்கை பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி ஐந்து கோடி ரூபாயை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கொரியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த இளைஞன் நாடு திரும்பிய நிலையில் வீடியோ கேம்களுக்கு அடிமையாக மாறியுள்ளார்.

இந்த விளையாட்டில் ஐந்து கோடியை இழந்தமையினால் மனம் உடைந்து இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.