வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம்-2024

1629

இராவண ஜென்ம பூமியாகவும் குபேரபூமி எனவும் பர்பர தேசமாகவும் இலங்காபுரியெனவும் அழைக்கப்பட்ட ஈழவளத்திருநாட்டின் வடபால் அணைதட்டிப் பாய்கின்ற பாரிய நீர்நிலைகளையும் வயல்நிலங்களையும் பெரும் கானகங்களையும் கொண்ட வவுனியா மண்ணில் பெயருக்கே ஏற்றவாறு பசுக்கூட்டங்களையும் மயிலக்கூட்டங்களையும் தன்னகத்தே கொண்ட கோவில்குளம் பதிதனிலே கோவில்கொண்டு நாடிவரும் அடியவர்கள் துன்பங்களை எல்லாம் நீக்கி அனைவருக்கும் பேரின்பப் பெருவாழ்வினை அளிக்கின்ற காத்தல் கடவுளாம் எம்பெருமான ஸ்ரீதேவி பூதேவிகளோடு உடனுறையும் நாராயணப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான  குடமுழுக்கு  20.03.2024   புதன்கிழமையன்று இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பெருமளவானபக்தர்கள் கலந்து கொண்டனர்.