50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

1121

களுத்துறையில் 50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி கத்திகுத்தில் முடிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.