கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவன் சில காலமாக தந்தையின் அன்பை இழந்துள்ள நிலையில் அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாணவன் பாட்டியின் பராமரிப்பில் கல்வியை மேற்கொண்டு வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.