களனி பல்கலை மாணவன் திடீர் மரணம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

347

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனமுற்ற மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எந்தவொரு அம்புயுலன்ஸ் வசதியும் களனி பல்கலைக்கழகத்தில் காணப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, இதற்கு, எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் முன்பாக ஏறத்தாழ 150 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.