தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல்.. பலர் காயம்.. ஆபத்தான நிலையில் 4 மாணவிகள்!!

901

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், மேலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில், சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகவும், இதன்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.