முகநூல் நட்பால் பதின்ம வயது சிறுமி வன்புணர்வு : நால்வரை தேடும் பொலிஸ்!!

1021

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை சந்தேக நபர்கள்,சிறுமியுடன் முகநூல் மூலம் அறிமுகமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.