இலங்கையில் நடந்த அசம்பாவிதம் : யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி!!

818

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாகரை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்