மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!

843

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு வந்த நிலையில், மாணவர்கள் ஆசிரியரை செருப்பால் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். அதோடு குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர்.

அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓட குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

மாணவர்களின் அடிதாங்க முடியாது தெறித்து ஓடிய ஆசிரியரை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.