IPL சூதாட்டத்தில் 1 கோடியை இழந்த நபர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

525

இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆர்வகம் கொண்டவர். கடந்த 2021ல் இருந்தே IPL போட்டிகள் தொடர்பில் சூதாட்டத்தில் தர்ஷன் ஈடுபட்டு வந்துள்ளார்.

சூதாட்டத்தில் தோல்வி காணும் போது கடன் வாங்கத் தொடங்கினார். கடன் தொகை அதிகமான நிலையில், கடன் அளித்தவர்கள் நெருக்கடி தரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி 23 வயது ரஞ்சிதா நிரந்தர கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 18ம் திகதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வெளியான தரவுகளின் அடிப்படையில் தர்ஷன் ரூ 1 கோடிக்கு மேல் கடனாளியாக உள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

தர்ஷன் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 2021ல் தொடங்கி 2023 வரையில் தர்ஷன் IPL சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சூதாடுவதற்காக சுமார் 1.5 கோடி வரையில் அவர் கடன் வாங்கியுள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 84 லட்சம் வரையில் தற்போதும் கடனாளியாக உள்ளார். தர்ஷன் – ரஞ்சிதா திருமணம் 2020ல் நடந்துள்ளது. ஆனால் 2021ல் தான் தமது கணவரின் சூதாட்டம் குறித்து அவர் அறிந்துகொண்டுள்ளார்.

தற்போது ரஞ்சிதாவின் தந்தை தமது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் என 13 பேர்களின் பெயர்களை பட்டியலிட்டு புகார் அளித்துள்ளார். இவர்கள் தர்ஷனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது மருமகனை ஏமாற்றியே சூதாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக விரைவில் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தையை நம்பியே தர்ஷன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஞ்சிதாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.