தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

1567

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர்.

இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விகாஷா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் அங்குள்ள நாராயணா கல்லூரியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது தெரியவந்துள்ளது.