மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் – இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்!!

655

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர். இதையடுத்து “உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.