இலங்கையரை கொலை செய்த பிரித்தானிய இளைஞன் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்!!

269

SL

இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய இளைஞன் தனது குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கஜீப் அகமட் என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவராவார். கடந்த 2011ஆம் ஆண்டு பிரித்தானிய சென்ற 25 வயதான தவிச பீரிஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்.

இலங்கை இளைஞன் கல்விக்காக லண்டன் சென்று பணம் உழைக்கவென அங்கு பீட்சா விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பீரிஸ், அங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்று தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்கும் வரை கடந்த ஒன்றரை வருடங்களாக பீட்சா விற்கும் வேலையில் முழு நேரம் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று (07.07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் தனது குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதுடன் மன்னிப்பு கோரினார்.