கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பஸ் விபத்தில்10 இற்கு மேற்பட்டோர் காயம்!!

282

Bus

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், மற்றுமொரு பஸ்ஸும் லொறி ஒன்றும் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிலாபம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.