காதலன் விபத்தில் பலி.. பிரிவை தாங்கமுடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

808

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி வயது 21 இவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் சோமனூர் திவாகரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 24. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். திவாகர், தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு சிங்காநல்லூர் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென எதிரில் வந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த அவரது காதலி தர்ஷினி கதறி அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்று திவாகர் உடலை பார்த்தார். அவருடைய உறவினர்கள் எத்தனையோ ஆறுதல் கூறியும் தர்ஷினி கதறியதை நிறுத்தவே இல்லை.

அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற தர்ஷினி தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.