17545 கோடி சொத்துக்களை இழந்து பைஜூஸ் நிறுவனம் பூஜ்யத்திற்கு வந்த கதை!!

528

பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு நோட்டிஸ் பீரியட் கொடுக்காமல் சாதரணமாக போன் கால் மூலமாக வேலையை விட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

`உங்கள் வேலை 2024 மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. சம்பளம் பின்னர் தறப்படும்` என்று போன் காலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இச்செயலுக்குக் கடுமையான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

மேலும், இதன்மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம எனத் தகவல்கள் வெளியாகிள்ளன. இது குறித்து பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், `வணிக கட்டமைப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதால் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் கடந்த 2023-ல் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டச் சிக்கல்கள் காரணமாக, நிறுவனத்தில் அசாதாரணமான சூழ்நிலையை நாங்கள் சந்திக்கிறோம்.` என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பைஜூஸ் நிறுவனம் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல பைஜூஸ் நிறுவனம்.

ஆன்லைன் வழியே கல்வியை வீடுகளுக்கே கொண்டு வந்த சேர்த்த மிகப்பெரிய நிறுவனமாக பைஜூஸ் மாணவர்களிடையே பரந்து விரிந்துள்ளது. இதன் எதிரொலியாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம் பிடித்தார் பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன். 2 வருடங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் , வருவாய் இழப்பு , கடன் சுமை என அடுத்தடுத்து பைஜுஸ் நிறுவனத்திற்கு அடிமேல் அடி விழுந்தது.

அதே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை முதலீட்டாளர்களுடன் பிரச்சனை என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. இந்நிறுவனம் ரூ28000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு Byju’s நிறுவனம் ரூ9754 கோடியை அனுப்பி உள்ளது.

ரூ944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக இந்நிறுவனம் செலவு செய்தாலும் அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை இந்நிறுவனம் சமர்ப்பிக்க தவறியது.

இதனால் ரூ. 9,362 கோடிக்கு அந்நிய செலவாணி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல சவால்களை இந்நிறுவனம் சந்திக்க தொடங்கியது. நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என அடுத்தடுத்து வழக்குகள்.

அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை வைத்து நிறுவனம் மறைத்தது கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீடு இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைந்தது.

தொடர் குற்றச்சாட்டுகளால் முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்த கூட முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு ரூ17,545 கோடி மற்றும் அவர் பல மதிப்புமிக்க ‘உலகின் பணக்காரர்’ பட்டியல்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் 2024 ன் படி, ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியமாகக் குறைந்திருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.